articles

img

இஸ்ரேலின் நெதன்யாகுவும் இந்தியாவின் நரேந்திர மோடியும்

மோடி பதவி ஏற்றதில் இருந்து  நீதித் துறையை  காவி அரசியலுக்கு ஏற்றவாறு  மாற்றிச்   சிதைப்ப தில்  குறியாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டுகளில் சார்பு நீதித்துறையில் மாவட்ட நீதிபதியின் நியம னத்தை  இந்திய ஆட்சிப் பணிகள்,  இந்திய காவல் பணிகளின் தேர்வுகளைப் போல   ஒன்றியஅரசின் நிறு வனத்தால் தேர்வு செய்யப்படும் முறையை (All India Judicial Service) நோக்கி   மோடி அரசு  தீவிர மாக நடவடிக்கை எடுத்தது. அரசியல் அமைப்பு விதிகள் 233- 237-களில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம்  நீதித்துறையில் பிராந்திய  வாழ்வியல்   உண்மைகளையும்  உணர்வுகளையும் அவைகளின் வழி நீதியின் வெளிச்சத்தை இந்திய மக்களுக்கு  வழங்கும்  நீதித்துறை  மாண்பை ஒழித்துக் கட்டும் வேலையை  துவக்கியது.  ஆனால் எதிர்பார்த்த அளவில் உயர் நீதிமன்றங்களில் இருந்து அதற்கான ஆதரவு   கிடைக்கவில்லை. எனவே அத்திட்டம் தற் காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.   

அதே சமயத்தில்  உயர் நீதித்துறையில் உச்ச நீதி மன்ற, உயர் நீதிமன்றங்களின்   நீதிபதிகளுக்கான  தேர்வுகளில்   கொலீஜியம் நியமன முறையை மாற்றும் விவாதத்தை இவ்வாண்டு துவக்கத்தில் மோடி அரசு துவக்கியது. அதாவது ஒரு புதிய அமைப்பிற் காக மாற்று வழிமுறைகள் சட்டங்கள் இல்லாத நிலை யில், கொலீஜியம் அமைப்பு தொடரும். ஆனால் மறு சீரமைப்பு தேவை என்று   ஒன்றிய அமைச்சர்   கிரண் ரிஜிஜு டெக்னிக்கலாக  சாதுரியமாக கூறினார்.  சீர மைப்பு என்ற பெயரில்   கொலீஜியங்களில்  மோடி  அரசு தான் விரும்பும்  காவி நபர்களை   புகுத்துவதற்கு தனது சகுனி காய்களை நகர்த்தத் துவங்கியது. சுருக்கமாகக் கூறுவதானால் சுதந்திரமான நீதித்துறை யை தகர்த்து   இந்திய  நீதித்துறை  தனது கருவியாக இருக்க வேண்டும்; தனக்கு  அடிபணிந்து இருக்க வேண்டும் என்றே   மோடி அரசு விரும்புகிறது.   

மோடியை பின்பற்றி நெதன்யாகு

உலகில் தீவிர  மத தேசிய  வெறி கொண்ட  தீவிர வலதுசாரி  சக்திகள்  ஆளும் அரசுகள்  பத்திரிகை-ஊடகம்-நீதித்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் கைப்பாவையாக வைத்திருக்கவே விரும்புகின்றன.  இதற்கு  ஹிட்லர் காலத்திலிருந்து உதாரணங்கள் உள்ளன. இந்தியாவில் இந்துத்துவா தீவிர  வலதுசாரி பாஜக அரசை போல கிட்டத்தட்ட இவ்வாண்டின் துவக்கத்தில் அதாவது  ஜனவரியில் இருந்து இஸ்ரே லிலும்  அந்நாட்டு நீதித்துறையை தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரும்   முயற்சிகள்  துவங்கின. 2023 ஜனவரியில், இஸ்ரேலின் நீதி அமைச்சர் இதற்கான   சட்ட  முன்மொழிவை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார் இந்தியாவில் சற்றேறக்குறைய  மோடி அரசு  சிந்தித்த  நீதிபதிகள்  தேர்விற்கான முயற்சிகளின்  வேறு வடிவம்தான் அது. இதனை எதிர்த்து இஸ்ரேலில் மார்ச் மாதத்தில் நடந்த போராட்டங்கள் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தன.  சமீபத்தில்  ஜூன்  துவக்கத்தில்   இஸ்ரேலின்  தீவிர மதவாத- தேசிய வெறி அரசியல் கட்சியான லிகுட் கட்சி யின் பிரதமரான  பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலிய நீதித்துறையின்  அடிப்படையை மாற்ற ஒரு  சட்டமுன் மொழிவை  அறிமுகப்படுத்தினார். அதாவது  இஸ்ரேல்  மற்றும் நீதித்துறை நியமனங்கள் மீதான அரசின்   அதிகாரத்தை அதிகரிப்பதன் மூலம்  உச்ச  நீதிமன்ற அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும்; நீதித் துறை சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும்  சட்ட மாக  அது இருந்தது. 

இச்சட்டத்தை    எதிர்த்து லட்சக்கணக்கான  இஸ்ரேலியர்கள் ஒன்றுபட்டு வீதியில் இறங்கிப்  போரா டினார்கள்.  இதுவரையில் இஸ்ரேல் கண்டிராத உலகில் எந்தநாட்டிலும் ஒப்பிட்டுக் கூற முடியாத பிரம்மாண்டமான போராட்டங்களாக  அவை இருந்தன. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் போராட்டங்களால்  நிரம்பியது.  இப் போராட்டங்க ளால்   இஸ்ரேல்  நாடாளுமன்றத்தில்  முன்மொழி யப்பட்ட  நீதித்துறை  திருத்தங்கள்    உலக  நாடுகள் விவாதிக்கக்கூடிய தலைப்பாக மாறியது. பெஞ்சமின் நெதன்யாஹு போராட்டக்காரர்களின்  கோபாவேச மான ஆவேச  முழக்கங்களால் அர்ச்சனை செய்யப் பட்டார். இஸ்ரேல் மருத்துவர்கள்  உள்பட பங்கேற்ற  வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன. ஆனால் இந்த  எதிர்ப்புகளையும் மீறி 24.7.2023 இஸ்ரேல் நாடாளுமன்றத்தில்  இது சட்டமானது. 

நெதன்யாகுவை விமர்சித்து  உலக பத்திரிகைகள்

இஸ்ரேலின் கருப்பு நாள் என்று  பிரபல  இஸ்ரேல் பத்திரிகைகள் கூட இதை  எழுதின. பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி முடிவு  நாட்டின் நீதித்துறை அமைப்பின் சுதந்திரத்தை பறிக்கும்  முயற்சிகளுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் 35ஆவது வார மாக தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். என்று  இஸ்ரேலின் மிகப்பெரும்   பத்திரிகைகளில் ஒன்றான ஹாரட்ஸ் தலைப்புச் செய்தியாக  (2.9.2023)  வெளி யிட்டது.  நீதித்துறை தேர்வுக் குழுவின் அமைப்பை மாற்றியமைப்பதன் மூலமும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன செயல்முறையை மாற்றுவதன் மூலமும் அதிக அரசியல் செல்வாக்கை நோக்கி இஸ்ரேல் நீதித்துறை  நகரும். மனித உரிமைகள் மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு  கடுமையான அபா யங்களை ஏற்படுத்தும்  என ஐ.நா மனித உரிமை களுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க் கவலை  தெரிவித்தார்.  (UN human rights  21.2.2023)

பெஞ்சமின் நெதன்யாகுவின்  நீதித்துறை மறுசீரமைப்பு இஸ்ரேலில் ஏற்கனவே ஆழமாக இருக்கும் மத, இன மற்றும் வர்க்க பிளவுகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது  என தி கார்டியன் எழுதியது.  13.9.2023  அன்று, சர்வதேச பொது மன்னிப்பு ஸ்தாப னம் (ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்)  இஸ்ரேலின் நீதித்துறை மறுசீரமைப்பு, குறிப்பாக பாலஸ்தீ னர்களின்  மனித உரிமைகளுக்கு  “ஆபத்தான”  விளைவுகளை  கொண்டுள்ளது என்று வாதிடும் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இஸ்ரேலின்  உச்ச நீதிமன்றம், “பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரே லின்  கொள்கைகள்,  நடைமுறைகள் மற்றும் சட்டங்க ளுக்கு எதிராக, பாலஸ்தீனிய மனித உரிமைகளைப் பாதுகாப்பதில்  சில  சந்தர்ப்பங்களில் தலையிட்டது” என்று அந்த அமைப்பு வாதிட்டது, ஆனால் இப்போது அரசாங்கத்திடம்  தன் அதிகாரத்தை இழந்தால், இந்த குறைந்தபட்ச  பாதுகாப்பு கூட மறைந்துவிடும் என்றது அந்த கட்டுரை. இஸ்ரேலில் முன்மொழியப்பட்ட நீதித்துறை சீர்திருத்தங்கள் பாலஸ்தீனர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று  ஐநாவின்  சுதந்தி ரமான ஒரு அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி ராய்ட்டர்  செய்தி நிறுவனமும்  எழுதியது (8.6.2023).

நீதித்துறை சீரழிப்பும்  இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரும்

 70 ஆண்டுகளுக்கு மேலாக   போர்களாலும் சதி வேலைகளாலும்  பாலஸ்தீனர்களை  பகுதி பகுதி யாக விரட்டியடித்த  இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு,  உலகில்  மிக பயங்கரமான  சதி அமைப்புகளான அமெரிக்காவின் சிஐஏ,  இஸ்ரேலின் மொசாத்   உளவுப் படை ஆகிய  இரண்டும் இணைந்து 1970-களி லிருந்து நடத்திய  பாலஸ்தீன அரபுத் தலைவர்களின்  படுகொலைகள் கணக்கிலடங்காதவை. காசா பகுதியில்  தொடர்ந்து நடத்தி வந்த இஸ்ரேலின் அட்டூ ழியங்கள்,  இவைகளின் தாங்க முடியாத ஒரு கட்டத்தில்,  இஸ்ரேலின் நீதித்துறை திருத்தச் சட்டம் பாலஸ்தீனர்களின் அச்சம் தடுமாற்றத்தை  குறிப்பிட்ட கொதி நிலையின்  உச்சத்திற்கு கொண்டு சென்றது. அது ஹமாஸ் அமைப்பு அக்.7 அன்று   இஸ்ரேலில் நடத்திய தீவிர தாக்குதலுக்கு  காரணமாகவும் அமைந்தது.

இந்த தாக்குதல்  உள்நாட்டில்  ஏற்கனவே  அரசி யல் பொருளாதார பிரச்சனைகளில்  குறிப்பாக  நீதித்துறை  சிதைப்பால் உள்நாட்டு மக்களின் எதிர்ப் பில்  சிக்கியிருந்த  பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.    தனது  தீவிர வலது சாரி  மதவாத அரசிற்கு எதிராகத்  திரண்டு கொண்டி ருக்கும்  இஸ்ரேல் மக்களின்  கவனத்தை திசை திருப்புவதற்கு  ஹமாஸ்  பயங்கரவாத பூச்சாண்டியை முன்னிறுத்தியது.  உலகின் ஏதேனும் ஒரு மூலையில் தொடர்ந்து கொண்டிருக்கும்  போர்கள்,  அமெரிக்காவின் ராணுவப் பொருளாதாரத் திற்கு  ஆதாயமாக மாறும் என்பதாலும் இஸ்ரேலை பலப்படுத்துவது, ஆதரிப்பது  அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு ஆதாயம்தான்  என்ப தால் ஜோ பைடன், பெஞ்சமின் நெதன்யாகுவை பகிரங்கமாக ஆதரித்தார். பெரும்பாலான ஜி-7 நாடுகளும் இஸ்ரேலை ஆதரித்தன.  

எல்லைதாண்டிய மதவாத தேசிய வெறி ஆதரவு பயங்கரவாதமே

சில விஷயங்களில்  அமெரிக்காவில் உள்ள  இஸ்ரேல் அமைப்புகளை பின்பற்ற   இந்திய ஆர்எஸ் எஸ், தனது அமெரிக்கக்  கிளையான  எச்எஸ் எஸ்-ஐ  ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இவ்வாண் டின் துவக்கத்தில்  இஸ்ரேலும் இந்தியாவும்  நீதித் துறையின்  சுதந்திரத்தைப் பறிப்பதற்கு எடுத்த முயற்சி கள் தற்செயலானவை அல்ல.  முற்றிலும் ஒன்றுக் கொன்று தொடர்புடைய, இணைந்து செல்லக்கூடிய தீவிர வலதுசாரி மதவாத தேசியவாதக்  கொள்கைக ளின்  இயல்புகளே ஆகும்.  இஸ்ரேலும் இந்தியாவும் தீவிர தேசிய,  மதவாத  தீவிர வலதுசாரி    தலைமைக ளின் கீழ் உள்ள நாடுகளாக  உள்ளன. இஸ்ரேலின்  நீதித்துறை தகர்ப்பையும்  இதனை எதிர்த்த  இஸ்ரேல் மக்களின் பிரம்மாண்டமான போராட்டங்களைப் பற்றி யும்  இந்திய நீதித்துறையில் மோடி அரசு கொண்டு வர  விரும்பும்  நாசகரமான மாற்றங்களைப் பற்றியும் தீவிர வலதுசாரி அரசுக் கொள்கைகளின் விளை வுகளையும் ஒப்பிட்டு நியாயமான ஆய்வை  மக்களிடம்  கொண்டு செல்வதற்கு பெரும்பாலான இந்திய பத்திரிகைகள்  ஊடகங்கள்  சிந்திக்கவே இல்லை.  வழக்கம்போல் கண்டுகொள்ளாமலும் எடுத்துச் சொல்லாமலுமே உள்ளன.    எனவேதான்  அக்டோபர் 7- ல் துவங்கிய போரின் மறுநாளே இந்தியாவின்  வெளியுறவு அரசியல் பாரம்பரிய பெருமையை  குழி தோண்டி புதைத்து விட்டு, நான் இஸ்ரேல் பக்கம் நிற்கிறேன் என்று நரேந்திர மோடி பதற்றத்துடன்  அறிவித்தார்.

காசா வில் மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அவசர தீர்மானத்தின் மீதான ஐ.நா பொ துச் சபையின் வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்கா மல்  ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தது. இவ்விரண் டும் எதிர்கால இந்திய வரலாற்றில் அவமானகரமான    அத்தியாயமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து    அகண்ட இஸ்ரேலை அமைப்பதன் மூலம் மத்திய கிழக்கு ஆசி யாவை  தனது    நண்பனான அமெரிக்காவின்  தள மாக மாற்றுவதற்கு பெஞ்சமின்  நெதன்யாகு  முயற்சிக்கிறார்  என்பது எவ்வளவு உண்மையோ. அதேபோல  அகண்ட பாரதத்தை  அமைப்பதன் மூலம்  ஆசியாவில் தனது நண்பனான அமெரிக்கா வின் தளமாக இந்தியாவை மாற்ற ஆர்எஸ்எஸும் மோடியும்  ஆசைப்படுவதும்  உண்மைதான்.